காரிமங்கலம், ஜூலை 25: காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. அதற்கு முன்னதாக திங்கட்கிழமை மதியம் முதல் தேங்காய் சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தையில் காரிமங்கலம் காவேரிப்பட்டணம், பாரூர், அரசம்பட்டி, நாகரசம்பட்டி, பண்ணந்தூர், குடிமேனஅள்ளி, தட்ரஅள்ளி, செல்லம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து, விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று நடந்த சந்தையில் சுமார் 70 ஆயிரம் தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் தேங்காய் அளவை பொறுத்து ₹7 முதல் ₹10 வரை விற்பனை நடந்தது. நேற்று நடந்த சந்தையில் ₹7 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை நடந்தது. கடந்த வாரத்தை காட்டிலும் தேங்காய் வரத்து குறைந்த நிலையில், மழை மற்றும் விலை இல்லாததால் தேங்காயை சந்தைக்கு கொண்டு வர விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.