புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த வந்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மா பூக்கள் அழுகல் ஏற்பட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.