மதுரை: காரைக்குடி அருகே தளக்காவூர் பகுதியில் உரிய விதிகளை பின்பற்றி மஞ்சுவிரட்டு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியது. ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடக்கும் ஊர் பட்டியலில் தளக்காவூரை சேர்க்க ஆட்சியர் பரிசீலிக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. அரசு வெளியிட்ட பட்டியலில் தங்கள் கிராமத்தை சேர்க்க கோரி மரிய செல்வராஜ் என்பவர் ஐகோர்ட் கிளையில் மனு அளித்திருந்தார்.