Sunday, May 12, 2024
Home » கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளை அருகே அடுத்தடுத்து கனரக வாகனங்கள் மோதி விபத்து..!!

கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளை அருகே அடுத்தடுத்து கனரக வாகனங்கள் மோதி விபத்து..!!

by Lavanya

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளை அருகே, அடுத்தடுத்து கனரக வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. குமரி மாவட்டத்தில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் கனிம வளங்களை ஏற்றி கொண்டு கேரளாவிற்கு சென்று வருவதால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்கும் பொருட்டு கனிமவளங்களை ஏற்றும் வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் குமரி மாவட்ட சாலைகள் வழியாக கனரக வாகனங்கள் இயங்குவதற்கு ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தார்.

அதன்படி காலை வேலையில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் செல்லும் வேலையில் கனரக வாகனங்களை இயக்கக்கூடாது என்றும் அதே போல கேரளாவிற்கு சென்றுவிட்டு கனிமங்களை இறக்கி கொண்டுவரக்கூடிய காலி வாகனங்கள் காலை வேலையில் இயக்கக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனை தொடர்ந்து ஒரு சில நாட்கள் லாரி ஓட்டுனர்கள் கடைபிடித்து வந்த காரணத்தினால் விபத்துகள் சற்று குறைந்து காணப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கனரக வாகனங்கள் காலையில் இயக்குவதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் வாகன ஓட்டுநர்களுக்கு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை கேரளாவில் இருந்து கனிமங்களை இறக்கி கொண்டு குமரிமாவட்டம் வழியாக வந்து கொண்டிருந்த 2 கனரக லாரிகள் களியக்காவிளை தாண்டி வரும் போது அந்த பகுதியில் உள்ள பள்ளியின் அருகில் இருக்க கூடிய நீர்த்தேக்க தொட்டியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சுமார் 30 மீட்டர் இடைவெளியில் மீன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கடை மீது அந்த வழியாக வந்த கனரக வாகனம் மோதி உள்ளே சென்றது. மோதிய வேகத்தில் அந்த கடையின் சுவர் விழுந்தது. அதிர்ஷவசமாக இந்த விபத்தில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை. விபத்தின் காரணமாக பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட முதல் நாளே விபத்து ஏற்பட்டு அடுத்தடுத்து இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தினால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதன் காரணமாக குமரி மாவட்ட சாலைகளில் கனரக வாகனங்களை இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என்பது இப்பகுதி சேர்ந்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

You may also like

Leave a Comment

20 − 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi