Tuesday, May 14, 2024
Home » காஞ்சி கோயிலில் கும்பாபிஷேக விழா

காஞ்சி கோயிலில் கும்பாபிஷேக விழா

by Arun Kumar

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 2 நாட்களாக கோயில் வளாகத்தில் 5 ஹோமகுண்டங்கள், 8 கலச ஸ்தாபன ஸ்தானங்கள் அமைத்து யாகசாலை பூஜைகள் நடந்தன. மூலவருக்கு நேற்று 108 கலசங்கள் மூலம் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று காலை 6.30 மணியளவில் வேத பண்டிதர்கள் அஷ்டபுஜப் பெருமாள் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பிரசாதம் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு, மாவட்ட நீதிபதி பா.உ.செம்மல், அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி சாந்தி, அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன் பாரதி, க.சுந்தர் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், மண்டல குழு தலைவர் சாந்தி, மாநகர செயலாளர் தமிழ்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், கச்சபேஸ்வரர் கோயில் திருப்பணி குழு நிர்வாகிகள், ஏகாம்பரநாதர் கோயில் அறங்காவலர் உறுப்பினர் ஜெகநாதன், மாமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இன்று மாலை உற்சவர்களான புஷ்பவல்லி தாயார் சமேத ஆதிகேசவப் பெருமாள் மலர் அலங்காரங்களுடன் வீதியுலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சந்தோஷ்குமார், மாமன்ற உறுப்பினர் கார்த்திக், கோயில் செயல் அலுவலர் கார்த்திகோயன் ஆகியோர் தலைமையிலான விழாக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

You may also like

Leave a Comment

20 + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi