Friday, May 31, 2024
Home » காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் கோயில் திருப்பணி: அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்

காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் கோயில் திருப்பணி: அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்

by Mahaprabhu

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரதநாதர் கோயில் திருப்பணியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கி வைத்தார். மிகவும் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் கோயிலில் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணி துவக்க விழா இன்று நடந்தது. முதல் கட்டமாக பரிவார சன்னதியான ராஜகோபுரம், ராஜகோபுரம் விநாயகர், ராஜகோபுரம் ஆறுமுகர், பல்லவ கோபுரம், விகட சக்கர விநாயகர், பல்லவர் கோபுர ஆறுமுகர், தம்பட்டை விநாயகர் ஆகிய சன்னதிகள் திருப்பணிகள் செய்ய பாலாலயம் நடைபெற்றது.

இதில் இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு, பாலாலய பணிகளை துவக்கி வைத்து பேசியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2022-23ம் ஆண்டு 70 கோயில்களில் 123 பணிகளுக்கு ரூ.42 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு பணி நடந்து வருகிறது. இதுபோல் 2023ம் ஆண்டு 56 கோயில்களில் 134 பணிகள் ரூ.10.50 கோடி செலவில் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை இந்து அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு திருப்பணி, திருவிழா, குடமுழுக்குகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. வரலாற்றிலே இல்லாத அளவிற்கு 5001 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 4740 கோடி ரூபாய் ஆகும். இதன் மூலம் இந்து சமய அறநிலையத்துறை மிகவும் சிறப்பாகவும், வேகமாகவும் செயல்பட்டு வருகிறது.

திராவிட மாடல் ஆட்சியில் கோயில்களில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருவதற்கு காரணமாக விளங்கக்கூடிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் தொகுதி எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், வக்கீல் எழிலரசன், ஏகாம்பரநாதர் கோயில் அறங்காவலர் வேல்மோகன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் நித்யா சுகுமார் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் விஜயகுமார், ஜெகநாதன் செயல் அலுவலர் முத்துச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

two + 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi