சென்னை: தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வழியனுப்பி வைத்தார் . 3 லாரிகளில் 20 டன் அரிசி, பால் பவுடர், போர்வைகள் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. உதவி தேவைப்படும் சூழ்நிலையில் இருப்பவர்கள் கண்டறியப்பட்டு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும்.