மும்பை : உச்ச, உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவி விலகி அரசியல் கட்சியில் சேருவதை விமர்சித்துள்ளார் சிவசேனை எம்பி சஞ்சய் ராவத். கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய பாஜகவில் சேரக்கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ள நிலையில் ராவத் இவ்வாறு பேசியுள்ளார். பணியில் உள்ள நீதிபதிகள் விலகி ஒரு கட்சியில் சேருகிறார் என்றால் அவர் இதுவரை நீதி வழங்கவில்லை என்றே பொருள் என்றும் ராவத் குறிப்பிட்டுள்ளார்.