சென்னை: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செய்தியாளர் மீதான தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.