சென்னை: இந்திய தொழில் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள முதன்மையான வருடாந்திர தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப மாநாடு – “நாளைக்கான தொழில்நுட்பம்” என்ற கருப்பொருளில் கவனம் செலுத்துகிறது. இந்த மாநாட்டை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
ஆண்டின் சிறந்த தொழில்முனைவோர் விருது கார் டெக்னாலஜிஸ் தலைமை நிர்வாக அதிகாரி மாறன் நாகராஜனுக்கும், தனியார் துறையில் தொழில்நுட்பத்தின் முன்மாதிரியான பயன்பாடு விருது விங்கா மென்பொருள் தலைமை நிர்வாக அதிகாரி பிரசன்ன சவுந்தர பாண்டியன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
பொதுத்துறையில் தொழில்நுட்பத்தின் முன்மாதிரியான பயன்பாடு விருது வேளாண் ஆணையர் சுப்பிரமணியத்திற்கும் வழங்கப்பட்டது. இந்த மாநாட்டில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ‘‘தமிழகம் முழுவதும் ஐடி துறையில் 10 ஆயிரம் வேலைகளுக்குப் பதிலாக, 25 ஆயிரம் வேலைகளை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்’’ என்றார்.