திருவாரூர்: மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டையில் 75 சவரன் நகை கொள்ளை வழக்கில் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். கொள்ளை நடந்த வீட்டின் உரிமையாளர் லாவண்யாவை மன்னார்குடி நகர காவல்துறையினர் கைது செய்தனர். கொள்ளை போனதாக கூறி 73 சவரன் நகையை மறைத்து வைத்திருந்ததாக வீட்டு உரிமையாளர் லாவண்யா கைது செய்யப்பட்டார்.