சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அருகிலுள்ள விநாயகர் கோயிலின் பூசாரியான ஹரிஹரனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெ.தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 20 ஆண்டுகளாக பூஜை நடத்தி வரும் என்னிடம் தீபா, மற்றும் அவர் கணவர் என்னை பூஜை செய்ய விடாமல் மிரட்டி வருவதாக ஹரிஹரன் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.