சென்னை: ஜப்பானை சேர்ந்த மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகவுள்ளது. மிட்சுபிஷி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தால் தமிழகத்துக்கு ரூ.1,800 கோடி முதலீடுகள் வர வாய்ப்பு உள்ளது. ஏர் கண்டீஷனர் மற்றும் கம்ப்ரசர் ஆலைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார்.