டெல்லி: ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்குகள் ஆக.2-ம் தேதி முதல் தினசரி விசாரிக்கபடும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அறிவித்துள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கபட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ல் ஒன்றிய அரசு ரத்து செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 23 வழக்குகள் தாக்கல் செய்யபட்டன.