Friday, May 10, 2024
Home » ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட அதிகாரம் இல்லை: ஐகோர்ட் கிளை

ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட அதிகாரம் இல்லை: ஐகோர்ட் கிளை

by Neethimaan

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவிடும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. விருதுநகர்: வத்திராயிருப்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரப்படுகிறது என அரசு தரப்பு விளக்கம் அளித்தது. அரசாணையில் குறிப்பிடாத இடங்களில் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி தர மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட முடியாது எனக்கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

four × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi