டெல்லி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை தாமதமாக மேற்கொள்வது ஏன்? என சிபிஐக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தாமதத்திற்கான காரணத்தை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஆந்திராவில் சில வாரம் முன்பு தான் கூட்டணி மாற்றங்கள் ஏற்பட்டன.