மதுரை: கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றவர்கள் சாலை ஆய்வாளர் பணிக்கு தகுதியானவர்கள் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. விருதுநகரை சேர்ந்த இளங்கோவன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் சாலை ஆய்வாளர் காலி இடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவித்திருந்தது. 761 சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.