இந்தியாவில் உள்ள கேரளா மாநிலம் முதல் AI ஆசிரியரான ஐரிஸை (Iris) அறிமுகப்படுத்தி கல்வித்துறையில் மற்றொரு புதுமையான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. மேலும், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் AI ஆசிரியர் ரோபோ இதுவாகும். மேக்கர்லேப்ஸ் எடுடெக் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஐரிஸ் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள KTCT உயர் நிலைப் பாடசாலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐரிஸ், மாணவர்களுக்கான கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்குடன் வடிவமைக்கப்பட்ட மனித உருவம் ஆகும்.