சென்னை: தனது அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்காவிடில் அச்சின்னத்தை முடக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தை முடக்கும்பட்சத்தில் அதற்குப் பதிலாக தனக்கு வாளி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.