விழுப்புரம்: மரக்காணம் அருகே விஷச்சாராயம் குடித்து 14 பேர் இறந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்.பி. கோமதியிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது. கோட்டகுப்பம் டி.எஸ்.பி. சுனில் உள்ளிட்ட போலீஸ் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்தனர்.