கிருஷ்ணகிரி: கெலமங்கலம் அருகே குடோனில் ஆய்வு நடத்தியபோது பட்டாசுகள் வெடித்ததில் அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர். வெங்கடபுரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் ஆய்வு செய்தபோது பட்டாசுகள் வெடித்தன, பட்டாசு வெடித்ததில் தனி வருவாய் அலுவலர் பாலாஜி, வட்டாட்சியர் முத்துப்பாண்டி உள்ளிட்டோர் காயமடைந்தனர். பட்டாசுகள் வெடித்ததில் படுகாயமடைந்த 3பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.