தஞ்சை: தஞ்சை அருகே முகமது பந்தர் பள்ளிவாசல் தலைவர் உட்பட 3 பேருக்கு பார்சலில் மனித மண்டை ஓடு அனுப்பிய 2 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிவாசல் தலைவர் முகமது காசிமுக்கு திருச்சியில் இருந்து வந்த பார்சலில் மண்டை ஓடு இருப்பதாக போலீசில் புகார் அளித்தனர். கீழ்வாசல் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் மற்றும் சவுக்கத் அலி ஆகியோருக்கும் பார்சலில் மண்டை ஓடு அனுப்பப்பட்டது.