சென்னை: அமலாக்கத்துறையை அரசியல் அடக்குமுறை ஆயுதமாக ஒன்றிய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். ஊழல் புகாருக்கு ஆளான முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுப்பிய கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திடவில்லை. எதிர்க்கட்சிகள் மீது பாஜக குறுக்குவழிகளில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திமுகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளும் எந்த சக்தியும் தமிழ்நாடு பாஜகவுக்கு கிடையாது எனவும் கூறினார்.