சென்னை: விசாரணை கைதிகளின் பல் பிடுங்கபட்ட வழக்கில் அமுதா ஐஏஎஸ் விசாரணை அறிக்கையை வழங்க ஐகோர்ட்கிளை உத்தரவிட்டுள்ளது. சம்பவம் நடந்த நாளில் காவல் நிலைய சிசிடிவி காட்சி, அமுதா ஐஏஎஸ் விசாரணை அறிக்கையை வழங்க கோரி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன் சிசிடிவி காட்சிகள் வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறினார்.