விழுப்புரம்: ஏனாதிமங்கலத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி செயல்பட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 11 ஹெக்டேரில் செயல்படும் மணல் குவாரியால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் விவசாயமும் பாதிக்கப்படும் என மனுதாரர் தெரிவித்துள்ளார். ஏனாதிமங்கலத்தைச் சேர்ந்த ஹேமராஜன் என்பவரின் வழக்கில் தமிழ்நாடு அரசு 4 வாரத்தில் பதிலளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.