Monday, May 20, 2024
Home » சென்னையில் ஒருங்கிணைந்த ஜவுளி நகரம்; ஆரணியில் கைத்தறி பட்டு பூங்கா: அமைச்சர் காந்தி அறிவிப்பு

சென்னையில் ஒருங்கிணைந்த ஜவுளி நகரம்; ஆரணியில் கைத்தறி பட்டு பூங்கா: அமைச்சர் காந்தி அறிவிப்பு

by Neethimaan

சட்டப் பேரவையில் நேற்று கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் காந்தி வெளியிட்ட அறிவிப்புகள்:

கைத்தறி:

  • கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு கைத்தறி பட்டுப் பூங்கா ஆரணியில் அமைக்கப்படும்.
  • இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் திட்டம் ரூ140 கோடியில் செயல்படுத்தப்படும்.
  • கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை கூலியில் 10 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும்.
  • சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தில் கைத்தறி நெசவாளர்கள் சந்தா செலுத்தப்பட வேண்டிய கால அளவினை 25 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகளாக குறைக்கப்படும்.
  • ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ2 ஆயிரத்தில் இருந்து ரூ5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். நெசவாளர்களுக்கென சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
  • கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ263.90 லட்சம் மதிப்பில் 3,006 தறிகள், உபகரணங்கள் வழங்குதல் மற்றும் 56 நெசவாளர்களுக்கு ரூ67.20 லட்சத்தில் தறிக்கூடங்கள் அமைத்து தரப்படும்.
  • ‘கைத்தறி ரகங்கள் பிரபலப்படுத்தும் திட்டம்’ செயல்படுத்தப்படும்.
  • நீலகிரி மாவட்டத்தில் தோடா எம்பிராய்டரி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் தொடங்கப்படும்.
  • கைத்தறி ரகங்களை காட்சிப்படுத்த 4 மெட்ரோ நகரங்களில் ’வாங்குவோர் விற்போர் சந்திப்பு’ நடத்தப்படும்.
  • கரூர் சாயச்சாலையில், ரூ20.40 லட்சத்தில் சீஸ் வடிவ நூல் சாயமிடும் இயந்திரம் நிறுவப்படும்.
  • உபபொருட்கள் விற்பனையகம் கோ-ஆப்டெக்ஸ் மூலம் ரூ 75 லட்சத்தில் சென்னையில் அமைக்கப்படும்.

துணிநூல் துறை:

  • அனைத்து ஜவுளிப் பிரிவுகளையும் ஒருங்கிணைத்த மாபெரும் ஜவுளி நகரம் பொது-தனியார் கூட்டாண்மையின் அடிப்படையில் சென்னையில் பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைக்கப்படும். இதன்மூலம் 20 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும்.
  • தொழில்நுட்ப ஜவுளிகள் தொடர்பான சர்வதேச கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும்.
  • தமிழ்நாட்டில் தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தொடர்பான கலந்தாய்வு மேற்கொள்ளவும் ஆராய்ச்சி மையங்கள் மற்றும் தொழில்முனைவோருடன் 2 நாள் பயிலரங்கம் நடத்தப்படும்.
  • தமிழ்நாட்டில் ஜவுளித்தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் உதவிகள் வழங்கிட துணிநூல் துறை கட்டுப்பாட்டின் கீழ் பிரத்யேக ’ஜவுளித்தொழில் ஊக்குவிப்பு பிரிவு’ அமைக்கப்படும்.

You may also like

Leave a Comment

2 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi