சென்னை: இந்தோனேசியாவிற்கு தேனிலவு சென்றபோது உயிரிழந்த புதுமண தம்பதி உடல்கள் தமிழகம் கொண்டுவரப்பட்டது. சென்னையில் மருத்துவர்களாக பணியாற்றிய லோகேஸ்வரன், விபூஷ்ணியா தம்பதி இந்தோனேசியாவில் 1ம் தேதி பலியாகினர். இந்தோனேசியா பாலி தீவில் அலையில் சிக்கி இருவரும் உயிரிழந்த நிலையில் உடல் சென்னை கொண்டுவரப்பட்டது.