நியூயார்க்: அமெரிக்காவின் ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் பிரமிளா ஜெயபால். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் சியாட்டில் நகரில் வசித்து வருகின்றார். இவருக்கு வாஷிங்டனை சேர்ந்த பிரிட் போர்செல் என்பவர் கடந்த ஆண்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதனை தொடர்ந்து போலீசார் இவரை கைது செய்தனர். இந்த வழக்கு கிங் கவுண்டியில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, எம்பிக்கு மிரட்டல் விடுத்த பிரிட் போர்செல்லுக்கு 364 நாட்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.