பாட்னா: இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார். எந்த கட்சி எவ்வளவு சீட்களில் போட்டியிடும் என இதுவரை அவர்கள் முடிவு செய்யவில்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு வேறு பெயரை வைக்கக் கூறினேன். பெயரை மாற்றுவதற்கு நான் பலமுறை வலியுறுத்தினேன்; ஆனால் இந்தியா என்ற பெயரை முடிவு செய்தனர். இதுபோன்ற சில முரண்பாடுகள் ஏற்பட்டதால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினேன் என்று நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.