டெல்லி: ஆதித்யா எல்1 செயற்கைக்கோளை நிலைநிறுத்தியதன் மூலம் இந்தியா மற்றொரு சாதனை படைத்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய விஞ்ஞானிகளின் தொடர் அர்ப்பணிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆதித்யா எல்1 சாதனை என்று கூறியுள்ளார். சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்தது.