பணி: Lieutenant (NCC- Special Entry) (56th) Batch.
மொத்த காலியிடங்கள்: 55. ஆண்கள்- 50 (இதில் 5 இடங்கள் போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உரியது). பெண்கள்-5 (இதில் ஓரிடம் போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உரியது).
சம்பளம்: ரூ.56,100- 1,77,500.
வயது வரம்பு: 01.07.2024 தேதியின்படி 19 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்று என்சிசியில் குறைந்த பட்சம் ‘சி’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான தகுதி: இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி: (ஆண்கள்). உயரம்- 157 செ.மீ., உயரத்திற்கேற்ற எடையை பெற்றிருக்க வேண்டும். (பெண்கள்)- உயரம்: 152 செ.மீ., எடை- 42 கிலோ.
உடற்திறன் தேர்வு: 24 கி.மீ., தூரத்தை 15 நிமிடங்களுக்குள் ஓடிக் கடக்க வேண்டும். சிட்அப்ஸ்-25, புஷ்அப்ஸ்-13, சின்அப்ஸ்-6, 3-4 மீட்டர் தூரம் கயிறு ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
அலகாபாத், போபால், பெங்களூரு, கபுதாலா ஆகிய மையங்களில் எஸ்எஸ்பி தேர்வு நடைபெறும். நேர்முகத் தேர்வின் போது ஆன்லைன் பிரின்ட் அவுட் படிவத்தில் போட்டோ ஒட்டி, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சென்னையிலுள்ள ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகடமியில் 49 வாரங்கள் பயிற்சி வழங்கப்படும். அக்டோபரில் பயிற்சி தொடங்கும். 6 மாத பயிற்சிக்குப் பின் லெப்டினென்ட் பணி வழங்கப்படும்.
www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.03.2024.