சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி 15 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு பதக்கங்கள் அறிவித்துள்ளது. அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக காவல்துறை அதிகாரிகள் 5 பேருக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது. காவல்துறை அதிகாரிகள் 10 பேருக்கு சிறப்புப்பணி பதக்கங்கள் வழங்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.