சென்னை: முத்திரைத் தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்டத்திருத்த மசோதாவை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். 2001ம் ஆண்டில் இருந்து முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்காததால் அச்சிடும் செலவு பன்மடங்கு உயர்ந்துள்ளது. சட்டத்திருத்தத்தின் படி ரூ.20 முத்திரைத்தாள் கட்டணம் ரூ.200ஆகவும், ரூ100 முத்திரைத்தாள் கட்டணம் ஆயிரம் ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.