Wednesday, May 29, 2024
Home » நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து சரிவு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து சரிவு

by Dhanush Kumar

கூடலூர்: நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென குறைந்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 2,349 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 868 கன அடியாக குறைந்துள்ளது. 152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை 119.80 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 868 கனஅடி. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 356 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 2592 மில்லியன் கனஅடி.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 50.13 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 152 கனஅடி. அணையிலிருந்து வினாடிக்கு 69 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 2010 மில்லியன் கன அடி. 126.28 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 80.55 அடி. அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையிலிருந்து வினாடிக்கு 3 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் இருப்பு நீர் 39.50 மில்லியன் கனஅடி. 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடி. அணைக்கு நீர்வரத்து, வெளியேற்றம் இல்லை. அணையின் இருப்புநீர் 302.98 மில்லியன் கனஅடி. மழையளவு பெரியாறு 0.2 மி.மீ, தேக்கடி 0.8 மி.மீ,

You may also like

Leave a Comment

five × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi