Tuesday, May 14, 2024
Home » தகாத உறவு ஆசிட் வீசி கணவனை கொன்ற மனைவி

தகாத உறவு ஆசிட் வீசி கணவனை கொன்ற மனைவி

by Karthik Yash

ஈரோடு: ஈரோடு கனி ராவுத்தர் குளம் ஜாமியா மஸ்ஜித் பின்புற வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (52). தறிப்பட்டறைத் தொழிலாளி. இவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததை அறிந்த மனைவி பத்மா (52) கண்டித்துள்ளார். ஆனால் அதை அவர் அலட்சியப்படுத்தவே கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பத்மா கணவரின் முகத்தில் பாத்ரூமுக்கு உபயோகப்படுத்தும் ஆசிட்டை ஊற்றினார். வலி தாங்க முடியாமல் அவர் அலறவே கட்டையால் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு, வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார். போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

You may also like

Leave a Comment

twenty + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi