நெல்லை: இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் முரளிதரன் கூறியிருப்பதாவது: 2023 மார்ச் 30ம் நாள், நிதித் துறையின் 93, 94 ஆகிய இரு அரசாணைகளின்படி 2023 ஏப்ரல் 1 முதல் அரசுத் துறையின் மூலம் கோரப்படும் ஒப்பந்தப்புள்ளிகளுக்கு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்ட விதிகளுக்கென சில திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 2023 ஏப்ரல் 1 முதல் கோரப்படும் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை மின்னணு இணையதளம் மூலம் அரசாணையில் தெரிவித்துள்ள விதிமுறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத் துறையைச் சார்ந்த அனைத்து ஒப்பந்தப்புள்ளி கோரும் அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.