சென்னை: சட்டவிரோத மணல் கொள்ளை வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தஞ்சை, திருச்சி, வேலூர், அரியலூர், கரூர் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளனர். மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருந்தது. மணல் கொள்ளை முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு என அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருந்தது.