சென்னை: சென்னை ஐஐடியில் மாணவர் தற்கொலை தொடர்பான புகாரை அடுத்து பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாணவர்கள் தற்கொலை குறித்து ஆய்வு செய்ய அமைத்த குழு அளித்த பரிந்துரையில் பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் ஐஏஎஸ், பேராசிரியர், மாணவரை உள்ளடக்கி 5பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.