![](https://www-dinakaran-com.imagibyte.sortdcdn.net/wp-content/uploads/2023/04/10-38.jpg?type=webp&quality=80)
மதுரை: கால்நடை உதவி ஆய்வாளர் பணி நியமனத்துக்காக ஆட்களை தேர்வு செய்ததை ஒத்திவைக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. துறைரீதியாகவும், வாரிசு வேலை அடிப்படையிலும் ஆட்களை தேர்வு செய்ததை ஒத்திவைக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கால்நடைத் துறையில் கால்நடை ஆய்வாளர் பணி நேரடி நியமனம் மூலம் வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனு குறித்து கால்நடைத்துறை செயலாளர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஏப்.10-க்கு ஒத்திவைத்துள்ளனர்.