திருமலை: தெலங்கானா மாநிலம், கரீம் நகரில் நேற்று தமிழகம், மகாராஷ்டிரா மாநில முன்னாள் கவர்னர் வித்யாசாகர் ராவ் நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டின் 2வது தலைநகராக ஐதராபாத் இடம் பெற வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். எனவே, விரைவில் நாட்டின் 2வது தலைநகராக ஐதராபாத் மாறும். இதை நடைமுறைக்கு கொண்டு வர அனைத்து கட்சிகளும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். 2வது தலைநகருக்கு தேவையான அனைத்து தகுதிகளையும் ஐதராபாத் நகரம் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நாட்டின் 2வது தலைநகராக ஐதராபாத் மாறும்: தமிழக மாஜி கவர்னர் பேட்டி
previous post