செங்கோட்டை: தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே வல்லம் கலைஞர் காலனியை சேர்ந்தவர் சந்தனகுமார் (28). கூலி தொழிலாளி. இவரது மனைவி கவுசல்யா. 2 குழந்தைகள் உள்ளனர். சந்தனகுமார் நேற்று வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி தாய் வீட்டிற்கு கோயில் திருவிழாவுக்கு செல்ல அனுமதி கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுக்கவே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சந்தனகுமார் வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து கவுசல்யாவின் மீது வீசியுள்ளார். அது வெடித்ததில் அவர் படுகாயமடைந்தார். இதில் வீட்டின் கதவு உடைந்து பொருட்களும் சேதமடைந்தது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த கவுசல்யாவை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து சந்தனகுமாரை கைது செய்தனர்.
மனைவி மீது வெடிகுண்டு வீசிய கணவன் கைது
previous post