புழல்: சோழவரம் அடுத்த பெருங்காவூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்( 43). இவரது மனைவி வசந்தி(35). மேலும் செங்குன்றம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்(37). இவரது மனைவிக்கும், வெங்கடேசனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனால், கடந்த நான்கு மாதங்கள் முன்பு வினோத்தின் மனைவி விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வெங்கடேசன் வீட்டுக்கு வந்த வினோத், அவரை ஆபாசமாக பேசி, கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இதை தடுக்க வந்த வசந்தியையும் தாக்கிவிட்டு தப்பி ஓடினார். இதில், படுகாயம் அடைந்த அவர்கள் அலறி துடித்தனர். இதைப் பார்த்த அக்கப்பக்கத்தினர் ஓடி வந்து, இருவரையும் மீட்டு நல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில், சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வினோத்தை நேற்று முன்தினம் இரவு கைது செய்து விசாரிக்கின்றனர்.