Thursday, May 2, 2024
Home » சோழவரத்தில் பரபரப்பு மனைவியின் கள்ளக்காதலுனுக்கு சரமாரி கத்திகுத்து: கணவன் கைது

சோழவரத்தில் பரபரப்பு மனைவியின் கள்ளக்காதலுனுக்கு சரமாரி கத்திகுத்து: கணவன் கைது

by Arun Kumar

புழல்: சோழவரம் அடுத்த பெருங்காவூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்( 43). இவரது மனைவி வசந்தி(35). மேலும் செங்குன்றம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்(37). இவரது மனைவிக்கும், வெங்கடேசனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனால், கடந்த நான்கு மாதங்கள் முன்பு வினோத்தின் மனைவி விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வெங்கடேசன் வீட்டுக்கு வந்த வினோத், அவரை ஆபாசமாக பேசி, கத்தியால் சரமாரியாக குத்தினார்.

இதை தடுக்க வந்த வசந்தியையும் தாக்கிவிட்டு தப்பி ஓடினார். இதில், படுகாயம் அடைந்த அவர்கள் அலறி துடித்தனர். இதைப் பார்த்த அக்கப்பக்கத்தினர் ஓடி வந்து, இருவரையும் மீட்டு நல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில், சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வினோத்தை நேற்று முன்தினம் இரவு கைது செய்து விசாரிக்கின்றனர்.

You may also like

Leave a Comment

12 + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi