சென்னை: சிதம்பரம் கோயில் பொன்னம்பல மேடையில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்தால் தீட்சிதர்களின் உரிமை எவ்வாறு பாதிக்கப்படும்? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. பொன்னம்பல மேடையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி ரமேஷ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கை அக்டோபர் 11ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.