துபாய்: இஸ்ரேல் – ஹமாஸ் படை இடையிலான போரில் ஹமாஸ்க்கு ஆதரவாக ஹவுதி போராளிகள் செங்கடலில் செல்லும் வணிக கப்பல்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். அங்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய ஏவுகணைகள், டிரோன்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக அமெரிககா தெரிவித்தது. ஏடென் வளைகுடாவில் லைபீரிய கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் கப்பலில் தீப்பிடித்தது. இந்திய கடற்படை கப்பல் ஐஎன்ஸ் கொல்கத்தா விரைந்து சென்று தீயை அணைத்துகப்பலில் இருந்த 13 இந்தியர்கள் உட்பட 23 ஊழியர்களை மீட்டதாக இந்திய கடற்படை நேற்று தெரிவித்தது.