நொய்டா: சமூக வலைதளங்களில் தங்களது வீடியோ வைரலாக வேண்டும் என்பதற்காக, என்ன வேண்டுமானாலும் செய்யும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய, ஆபத்தான வீடியோக்களை வெளியிட்டு சிக்குகிறார்கள். அந்த வகையில் தற்போது சில வீடியோக்கள் வைரலாகி வருகிறது. நேற்று வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. அந்த வகையில் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் ஒரு இளைஞனும், இரண்டு இளம் பெண்களும் ஸ்கூட்டரில் பயணம் செய்கின்றனர். அவர்கள் ஆபாசமாக நடந்து கொள்கின்றனர்.
மேலும் அவர்கள் ஹெல்மெட் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்துக் கொள்ளவில்லை. அதேபோல் மற்றொரு வீடியோவில் வாலிபர் ஒருவர் பைக்கை ஓட்டிச் செல்கிறார். அவரது பின்னால் அமர்ந்திருந்த இளம்பெண், திடீரென பைக்கின் மீது நின்று ெகாண்டு ஹோலி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். திடீரென அந்த இளைஞர் பிரேக் போட்டவுடன், அந்தப் பெண் கீழே விழுந்தார். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோக்களை பார்த்து, பலரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் நொய்டா போலீசாரின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களுக்கு ரூ.33,000 அபராதம் விதித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக நொய்டா போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.