டெல்லி: தமிழ்நாட்டில் இந்து கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் 30,311 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 2,949 கோயில்களுக்கு பரம்பரை அறங்காவலர்கள் அல்லாத அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது 6420 கோயில்களுக்கு அறங்காவலர்கள் உள்ளதாக தமிழ்நாடு அரசு கூடுதல் பதில் மனுவில் தகவல் தெரிவித்துள்ளது.