ஹிஜாவு நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான சவுந்தரராஜனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, நிதி நிறுவனம் மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர்கள் தலைமறைவாக உள்ள நிலையில் சவுந்தரராஜனுக்கு ஜாமின் தர முடியாது என நீதிபதி கூறினார். சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கிய நிறுவனம் 15% வட்டி தருவதாக ரூ.4,620 கோடி முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்டது.