பொள்ளாச்சி: உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி த.பெ.தி.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவையில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் சனாதன தர்மத்தை ஆதரித்துப் பேசுவதையே தொழிலாகக் கொண்டவர் நீதிபதி சுவாமிநாதன். ஜாதி வேற்றுமையை நீதிமன்றத்தில் நீதிபதி சுவாமிநாதன் அப்பட்டமாக வெளிக்காட்டி வருவதாக த.பெ.தி.க. கண்டனம் தெரிவித்துள்ளது.