சென்னை: உயர்நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களோ, தலைவர்களோதான் பதில் தர வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து துறை செயலாளர்களுக்கும், துறை தலைவர்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்கும்படி தலைமைச் செயலாளருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரசின் காலதாமதத்தால் பணி ஓய்வுக்கு முன் தனக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை என ஜெயராம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். வருவாய்த்துறை துணை ஆட்சியராக பணியாற்றிய ஜெயராம் என்பவர் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.