மதுரை: அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக அரசுகள் நடவடிக்கை எடுக்க கோர்ட் ஆணையிட்டுள்ளது. மனுதாரரின் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து தவறிழைப்போரின் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட கோரி கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.